states

img

ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல்

ஸ்ரீநகர், ஆக. 22- ஜம்மு-காஷ்மீரில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேசிய மாநாட்டுக் கட்சி - காங்கிரஸ் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக் கான 370ஆவது பிரிவை மதவெறி அர சியல் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதி யாக, மோடி அரசு கடந்த ஆகஸ்ட் 5,  2019 அன்று நீக்கியது. 370ஆவது பிரி வை நீக்கிய பின்பு ஜம்மு-காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசமாக பிரிக்க ப்பட்டது. அதன்படி ஜம்மு-காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதி மற்றொரு யூனியன் பிரதேச மாகவும் பிரிக்கப்பட்டன.

சிறப்பு அந்தஸ்துக்கான 370ஆவது பிரிவை நீக்கியதால் மக்கள் தங்களது வாக்குகள் மூலம் பதிலடி கொடுப்பா ர்கள்; இதனால் பாஜகவிற்கு படு தோல்வி கிடைக்கும் என அஞ்சிய மோடி அரசு, ஜம்மு-காஷ்மீரில் சட்ட மன்ற தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தியது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வழக்கு தொடர்ந்த நிலையில், 2024 செப்டம் பர் 30க்குள் ஜம்மு-காஷ்மீரில் சட்ட மன்ற தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தர விட்டது.

உச்சநீதிமன்றம் கறாராக அறி வித்ததால் கடந்த 10 ஆண்டுகளாக சட்ட மன்ற தேர்தலை எதிர்கொள்ளாமல் உள்ள ஜம்மு-காஷ்மீரில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25, அக்டோபர் 1 ஆகிய  தேதிகளில் மூன்று கட்டங்களாகத் வாக்குப்பதிவு நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித் தது. ஜம்மு-காஷ்மீரில் மொத்தம் 90 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலை யில், 42.6 லட்சம் பெண் வாக்காளர்கள் உள்பட மொத்தம் 87.09 லட்சம் வாக்காளர்கள்  உள்ளனர்.

“இந்தியா” கூட்டணி உதயம்

தேர்தல் அறிவிப்பு வெளியான வுடன் ஜம்மு-காஷ்மீரில் அரசியல் கட்சி கள் கூட்டணி அமைப்பு உள்ளிட்ட தேர்தல் வேலையை துவங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கேவும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி யும், ஸ்ரீநகரில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர்கள் பரூக் அப்துல்லா இல்லத்தில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

இந்த பேச்சுவார்த்தை நிறைவு பெற்ற பின்பு வியாழனன்று,”90 சட்ட மன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதாக முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா கூறினார். 

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறுகை யில், “கூட்டணி தொடர்பாக சுமுக மான சூழலில் நாங்கள் ஒரு நல்ல  சந்திப்பை நடத்தினோம். சரியான பாதையில் கூட்டணி இறுதியாகி யுள்ளது. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகலாம். 90 தொகுதி களிலும் இந்த கூட்டணி இருக்கும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் யூசுப் தாரிகாமியும் எங்களுடன் உள்ளது போல, காஷ்மீர் மக்களும் எங்களுடன் இருப்பார்கள். மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கு நாங்கள் பெருவாரியாக வெற்றி பெறு வோம். மாநில அந்தஸ்து என்பது எங்களுக்கு மிகவும் முக்கியமானது. மிகவும் துயரமான நாட்களை ஜம்மு-காஷ்மீர்  மாநிலம் கண்டுள் ளது. முழு அதிகாரத்துடன் இவை  சரிசெய்யப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். அதற்காக நாங்கள் “இந்தியா” கூட்டணியுடன் இணைந்து நிற்கிறோம்” எனக் அவர் கூறினார்.